
இந்த உலகத்தில் மிக அதிகமான மக்களை கொண்ட மதமாக கிறிஸ்தவமதம் இருக்கிறது எனலாம். இச்சமயத்தின் கடவுளான இயேசு கிறிஸ்து எருசலேம் நகரங்களில் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பணக்கார இளைஞன் அவரிடம் வந்து நான் மோட்சம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு இயேசு அவனிடம் "நீ பொய் உன் ஆஸ்திகளை விற்று ஏழைகளுக்கு கொடு" என்றார்.
அன்பர்களே இதிலிருந்து நாம் அறிய வரும் கருத்து என்னவென்றால், இயேசு கிறிஸ்து மதத்தை விட மனிதத்தை போதித்தார். இன்று அவருடைய கருத்துக்கள் உலகமெங்கும் ஏற்று கொள்ளபடுகின்றது.
அன்னை திரேசா மதத்தை போதிக்காமல் மனிதத்தை வளர்த்தால்தான் எல்லாராலும் போற்றபடுகிறார். மனிதம் எனபது நம்மை போல பிறரை நேசிப்பதுதான். கண்முன் கஷ்டபடுகிற மனிதனுக்கு கொடுக்காமல், காணாத மகேஷனுக்கு உண்டியலிலும், காணிக்கை பைகளிலும் கொட்டுவது முட்டாள்தனமான செயல் என்றே சொல்வேன். நம் இந்திய தேசத்திற்கு இருக்கின்ற எண்ணிகையில் அடங்காத மதங்கள் போதும். தேவையானதெல்லாம் வீட்டுக்கு ஒரு மரமும், மனிதமும் தான்மரம் வளர்ப்போம்! மனிதம் வளர்ப்போம் !!