Sunday, February 1, 2009

நன்றி சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்

என் இனிய தமிழா!
தமிழ் தாய் ஈன்றெடுத்த முத்து குமரா!
தமிழர்களின் நண்பா- உன் தியாகத்திற்கு
இந்த பாமரன் எழுதும் வெண்பா.

தமிழ் ஈழம் வரும் வரை அல்ல
தமிழ் இனம் வாழும் வரை
நீ வாழ்ந்துக்கொண்டிருப்பாய்
கல்லறையில் அல்ல, எங்கள் கருவறையில்.

எங்கடா போனாய்? - நாம்
தமிழ் ஈழத்தை காணும் முன்பு
நீ முத்து பயலாடா
புதைந்து கிடந்தாலும் புதையலாகவே இருக்கிறாய்!!