Friday, April 8, 2011

மறக்குமா நெஞ்சம்?? என்றைக்கும் மறக்க மாட்டோம்...!!

அன்பு நண்பர்களே 2 நிமிடம் இதை படித்து விட்டு நீங்கள் உங்கள் வாக்குகள் யாருக்கு என்று நிர்ணயம் செய்யவும். இன்றைக்கு சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்பேன் என ஜெயலலிதா சொல்லுவது "சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது" .


சிறுபான்மை இனமான கிறிஸ்தவ வாக்காளர்களே யோசித்து வாக்களிக்கவும்.

2002 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் வாரத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா அரசு கொண்டு வந்ததா? இல்லையா? அதைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தபோது, அவைகளை ஜெயலலிதா உதாசீனப்படுத்தி, சிறு பான்மையின மக்களின் நலன்களையும், உரிமை களையும் பாதிக்கச் செய்தாரா? இல்லையா?

2003 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் போப்பாண்டவரே கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கண்டித்த போது, போப்புக்கு அதற்கான எந்தவிதமானஅதிகாரமும் உரிமையும் கிடையாது என்று ஜெய லலிதா அறிக்கை விடுத்து சிறுபான்மையினரான கிறித்தவர்களின் மனதை நோக அடித்தது உண்டா, இல்லையா?

சட்டப் பேரவையில் 31-10-2002 அன்று ஜெயலலிதா ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

தி.மு.கழக ஆட்சியில்தான் தமிழ்நாடு கட்டாய மத மாற்றத் தடை (நீக்கச்) சட்ட முன் வடிவு 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 31-5-2006 அன்று அந்தச் சட்ட முன் வடிவு ஆய்வு செய்யப் பட்டு நிறை வேற்றப்பட்டது

2003ஆம் ஆண்டும் இது போலவே தான் கட்சியின் சார்பில் இஃப்தார் நிகழ்ச் சியை ஏற்பாடு செய்து, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த வர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பி அழைத்து விட்டு, கடைசி நிமிடத்தில் அந்த விழாவிற்கு தான் செல்லாமல் தவிர்த்தார். வீட்டிற்கு விருந்தினர்களையெல்லாம் சாப்பிட வாருங்கள் என்று அழைத்துவிட்டு, அவர் கள் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது வீட்டைப் பூட்டி விட்டு செல்பவர்களுக்கும் ஜெயலலிதா விற்கும் வேறுபாடு உண்டா?

23-8-2001 ஆம் நாளன்று சட்டசபையில் திருமாவளவன் “இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்; அதை நடைமுறைப்படுத்த நான் ஆணையிடுவேன் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேசியது எனக்கு நினைவு இருக்கிறது. ஆகவே, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?” என்று ஜெயலலிதாவைக் கேட்டபோது, “அப்படிப்பட்ட உத்தரவாதத்தைத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்; நான் அல்ல” என்று கூறியவர்தான் ஜெயலலிதா. கழக ஆட்சி 2006-ல் பொறுப்பேற்ற பின்புதான், 22-10-2007 ஆம் நாளன்று, தமிழ்நாடு கிறித்தவ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.



1992 ல் இஸ்லாமியர்களின் மசூதியை இடிக்க சென்னையில் இருந்து கரசேவகர்களை அனுப்பினார் எனபதற்கு ஜெயலலிதா மீது ஆதாரமான குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு மசூதி இடிக்க அனுப்பிய இவர் சென்னை அயோத்தி குப்பத்தில் இருக்கும் மசூதியை இடிக்கமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?



சிறுபான்மை மக்களின் எதிரியாக கருதப்பட்டு, பல இஸ்லாமியர்களின் சாவுக்கு காரணமான திரு. நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க அரசால் மனிதநேயமற்ற காட்டு மிராண்டியாக கருதப்பட்டு தன் நாட்டுக்குள் வர தடை விதித்துள்ள நிலையில், குஜராத்திலிருந்து சென்னை வரும்போதெல்லாம் அன்பு சகோதிரி ஜெயலலிதாவை பார்க்காமல் செல்லமாட்டார். (உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று - இது பழமொழி)


இந்த பெண்மணியை பற்றி அவர்களுடைய அரசியல் சாணக்கியர் சோ (பழைய காமடி பீஸ்) சொல்லும்போது ஜெயலலிதாவிடம் நான் ஆண் குனங்களைத்தான் காணுகிறேன். நல்லா யோசிச்சி பாருங்க இப்படி பட்ட சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள் மற்றும் தலித் மக்களின் நிலை என்ன?


காஞ்சி சங்கராச்சாரியார்களைக் கைது செய்த ஜெயலலிதா பொய் வழக்கில் கிறிஸ்தவ இஸ்லாமிய மற்றும் தலித் சாமியார்களை கைது செய்வது எம்மாத்திரம்?

ரேஷன் கார்டுகளில் H முத்திரை ரூ. 5,000 மாத வருமானம் உள்ள குடும்பத்தினரின் ரேசன் அட்டைகளில் இந்த முத்திரையைக் குத்திய ADMK அரசு,அவர்களுக்கு ரேசனில் எந்தப் பொருளும் தரப்படாது என்று அறிவித்தது.

தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லாதவர், முதல்வராகவும் இருக்கத் தகுதி இல்லை, எனவே அவர் முதல்வராக இருந்த நான்கு மாத காலங்களும் செல்லாதுNull and Invaஎன 21, செப்டம்பர் 2001 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆடிய பேயாட்டத்தில் மக்கள் பட்ட துன்பம் ஒன்றா, இரண்டா?

1. எஸ்மா, டெஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி, 1,70,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்க்ளை வேலை நீக்கம் செய்தது. பெண்கள் என்றும் பாராமல் நடு இரவில் அவர்களை வீடு தேடிச் சென்று கைது செய்து சிறையில் அடைத்தது.

2. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது

3. பல வண்ணங்களில் குட்ம்ப அட்டைRati வழங்கியும், H முத்திரை குத்தியும் மக்களைப் பாடாய்ப்படுத்தியது.

4. கட்டாய மதமாற்றத் தடுப்பு சட்டம்

5. பேருந்து கட்டணங்களை உயர்த்தியது.

6. பத்திரிகை ஆசிரியர்களை கைது செய்து சிறையில் தள்ளியது.

அவரது பேயாட்டம் 2004 பாராளுமன்ற தேர்தல் முடிவு வரும் வரை தொடர்ந்தது.

2003 ல், காலம் காலமாக நடைபெற்று வந்த கிறிஸ்தவ கூட்டங்கள் மற்றும் பெருவிழாக்கள் நடக்கும் சீரணி அரங்கத்தை இடித்து தரைமட்டமாகியது புண்ணியவதி ஜெயலலிதாவின் ஆட்சி. ''ரமலான் பக்ரீத் பெருநாட்களின் போது சிறப்பு தொழுகைகள் மெரீனா கடற்கரையில்தான் காலம்காலமாக நடந்துக்கொண்டிருந்தது. அதை தடுத்துவிட்டார்கள்.

சீரணி அரங்கத்தை இடித்த ஜெயலிதாவிற்கு, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் கூட்டம் நடத்தக்கூடாது என சட்டம் போட தெரியாதா என்ன?

கருணாநிதியின் ஆட்சி கொடுங்கோல் சர்வாதிகாரி ஆட்சி என ஜெயலலிதா சொல்லுகிறார்(எப்படி எப்படி !!) சில நேரங்களில் ஜெயலிதா காமெடி பண்ணுவார். சர்வாதிகாரம் என்பதற்கு தமிழ் அகராதியில் ஜெயலிதாவின் பெயரை பதிக்க வேண்டும்.


சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் 425 கோடி ரூபாய் செலவில் புதிய சட்டசபை கட்டப்பட்டு இருக்கிறது. இந்த அம்மா ஜெயிச்சா( ஐயோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேங்க!!) அங்க போக மாட்டாங்களாம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போவாங்களாம்(எப்புடி?). இது (sorry இந்த அம்மா) சர்வதிகாரத்தை பத்தி பேசுது.

கிறிஸ்தவர்கள் அழுதபோது நம்மோடு தோள்கொடுத்து நின்றவர் கலைஞர் கருணாநிதி என்பதை பைபிள் தூக்கும் கிறிஸ்தவர்கள் யாரும் மறந்து போக மாட்டார்கள்.

ஜெயலலிதாவின் கூற்றினை யார் நம்புகிறார்களோ, இல்லையோ, சிறுபான்மை சமுதாயத்தினர் நிச்சயமாக நம்ப மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி

“என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.” - மல்கியா 4:2

” இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்!! மௌனமாயிருக்காதே.



No comments: