Thursday, November 13, 2008

எங்கே போகும் இந்த பாதை?

குழந்தைகள் தின விழா நவ 14 இந்த வருடம் குழந்தைகள் தின விழா கொண்டும் பொழுது நம் சமுதாயத்தை ஒரு கணம் திரும்பி பார்த்தல் நம் குழந்தைகள் எந்த பாதையை நோக்கி போய் கொண்டிருக்கின்றது என்பதை அறியலாம். வன்முறை கலாச்சாரம் பெருகிகொண்டேயிருக்கிறது எனவும் அறியலாம். இது எங்கிருந்து வருகின்றது என்பதை தேடி அறிவது கஷ்டமாகத்தான் உள்ளது.
குழந்தைகள் வளருகின்ற ஓவவொரு கட்டத்திலும் வன்முறையை பார்த்துதான் வளர்கிறார்கள். வீட்டில் சண்டை, தெருவில் சண்டை, ஜாதி சண்டை,மத சண்டை,மற்றும் கட்சி சண்டை என்றும் கார்டூன் படம் தொடங்கி சினிமா படம் வரை வன்முறைதான் நிரம்பி வழிகிறது. அதை பெற்றோர்கள் முதல் நாட்டு தலைவர்கள் வரை யாரும் கண்டுகொள்வதே இல்லை. இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாவது இளைய சமுதாயம்தான். இதனுடைய வெளிப்பாடுதான் நவ 12,2008. சென்னை Dr.அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறை வெளிப்பாடு. எங்கிருந்து வந்தது இந்த ஜாதி வெறி இந்த வயதில், கல்லுரிக்குள் கத்தி கலாசாரம். ஒழுக்கத்தை சொல்லிகொடுக்கும் பாடசாலைகளில் வன்முறை கலாச்சாரம். கல்லூரி முதல்வர்தான் காரணம் என்று மாணவர்களின் குற்றச்சாட்டு. " இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்" என்ற நிலை மாறி நாளைய தீவிரவாதிகளை மாறி வருகின்றனர். நாளுக்கு நாள் குற்றங்களும் குற்றவாளிகளும் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றது. ஆகவே இதை சிந்திக்கும்போது ஒருவேளை நம் இளைய சமுதாயம் தடம் புரண்டு ஓடிகொண்டிருகிறதோ? என்ற பயம் கவ்வி பிடிக்கிறது. இதேர்க்கெல்லாம் சமுதாயத்தையும். சுற்று சூழலையும் குறை சொல்லாமல் நம் பிள்ளைகளின் எதிர் காலம் வளமை பெற்றிட உருவாக்குவோம் ஒரு புதிய இளைய சமுதாயம். இந்த குழந்தைகள் தினவிழாவை. அர்த்தமுள்ள சீர்திருத்த நாளாக அனுசரிபோம். மீண்டும் பழைய நேரு மாமா கதைகளை சொல்லி நேர்ரத்தை வீணாக்காமல், வாழ்க்கையின் அடிப்படை தத்துவங்களை சொல்லி தந்து கொண்டாடுவோம். இன்று அம்பேத்கர், முத்துராமலிங்க தேவரை வைத்து சண்டை போட்டவங்க . நேரு மாமா எங்களுக்கு தாய் மாமா என்றும் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்றும் சொல்லாதிருக்கட்டும். நாளை விடியல் புதிய விடியலாய் இருக்கட்டும்.

Saturday, November 8, 2008

உணவு கொடுத்த கலைஞர் ஐயா

இந்த (2008) ஆம் வருடம் ஈழ தமிழர்களின் நலன் பற்றி தமிழகம் அதிக அக்கறை கொண்ட வருடம். எல்லா பெரும்பாலான கட்சிகள் இதில் மிக கவனம் எடுத்துகொண்டது. தற்போதைய முதல்வர் தமிழின தலைவர் கலைஞர் கருணாநிதி அய்யா இதில் அதிகமாய் பொறுப்பெடுத்து பணம் திரட்டி உணவு பொருள்களை அனுப்பி வைத்திருக்கிறார். இது மிக பெரிய சாதனை. இதற்க்காகவே அவருக்கு அடுத்த முறை ஓட்டு போடலாம் போல இருக்கு. என்னை போன்ற பாமரனின் ஏக்கமெல்லாம் உணவு வாங்கிகொடுத்த கலைஞர் அய்யா அப்படியே உரிமையும் வாங்கி கொடுங்க. உரிமை என்பதை விலை கொடுத்து வாங்க முடியாதுதான் ஆனால் உங்களுடைய முயற்சியால் நிச்சயம் வாங்கி தர முடயும். உங்கள் தாமதத்தின் அர்த்தம் என்ன? புரிந்துகொள்ள முடியாத பாமரன் நான்.உணவு வாங்கி கொடுதிங்கலே உரிமையும் நீங்க தானே வாங்கித்தரனும்.

Wednesday, November 5, 2008

மனிதநேயம் கொண்ட கமல்

நவ. 7 கமலின் பிறந்தநாள். கமல் ரசிகர்களுக்கு இந்நாள் திருவிழா. இந்த முறை சின்ன மாற்றம். ஈழத்தமிழரின் நலனுக்காக கொடைகொடுத்த வள்ளல்களின் மத்தியில் தனித்து நிற்பவர் நம் உள்ளங்களின்(உலக) நாயகன் பதமஸ்ரீ கமலஹாசன், ஈழத்தில் தமிழர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார். ஈழத்தில் நடந்துவரும் போரினால் உயிரை பலரும், பிறந்த நாட்டையே பலரும் இழந்துவரும் இவ்வேளையில், தனி ஒரு மனிதன் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல்
சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன்.
மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன.இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில், நம் வீட்டில் குதூகல கொண்டாட்டங்கள் நடப்பது மனிதநேயம் சார்ந்த செயலாக இராது.
வழக்கமாக நான் பிறந்ததை கொண்டாடும் இத்தினத்தை, நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே, இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாக செலவிடுங்கள். இறந்தவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள்.
நான் கமலின் ரசிகனும் அல்ல சினிமா விமர்சகனும் அல்ல. மனிதனை மனிதனாய் பார்க்கும் சாதாரண பாமரன். இப்படி ஈழத்தமிழரின் துன்பதிற்காய் தன் இன்பத்தை மறந்த நம் வீர தமிழனுக்கு இந்த பாமரனின் வாழ்த்துக்கள்.

தவளை ஆண்டா? தமிழர் ஆண்டா?

தவளை இனம் அழிந்து வரும் ஆபத்து: 2008-ஐ தவளைகள் ஆண்டாக சர்வதேச அமைப்புகள் அறிவிப்பு. தவளைகளை இனி புத்தகங்களில் தான் பார்க்க முடியும் என்ற செய்தி நமக்கு அதிர்ச்சியைத் தரலாம்.
தவளை இனம் வெகுவாக அழிந்து வருவதைத் தடுக்க சர்வதேச அமைப்புகளான நெதர்லாந்தில் உள்ள “வேல்டு அசோசியேசன் ஆப் சூஸ் அன்ட் அக்குவேரியம்ஸ்’ (WAZA), வேல்டு கன்சர்வேஷன் யூனியன் (WCU),ஸ்பீசியஸ் சர்வைவல் கமிஷன்(SSC), அமெரிக்காவில் உள்ள கன்சர்வேஷன் பிரீடிங் குரூப் (CBGA) உள்ளிட்ட அமைப்புகள் இது பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தவளைகளை வேண்டுமானால் புத்தகத்தில் பார்த்துகொள்ளலாம். ஆயிர கணக்கான ஈழ தமிழ் மக்கள் படுகொலை செய்யபடுகிறார்கள் அடித்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு விரட்டபடுகிறார்கள். இதை பற்றி எந்த சர்வதேச அமைப்புகள் கவலைபடுகிறது. இன்னல்படுகிற மக்களுக்கு உணவும் பணமும் தந்தால் போதுமா? நிம்மதியான வாழ்க்கைக்கு யார் வழி செய்வது? தவளைக்கு கவலைப்படும் நம் சமுதாயம் ஏன் தமிழர்களுக்கு கவலை படமாட்டேங்கிறது? சரி தமிழனை பற்றி இன்னொரு தமிழனே கவலைபடாதபோது சர்வதேச சங்கங்களுக்கு என்ன வந்தது?ஆனால் தவளைக்கு இருக்கும் சர்வதேச மரியாதையை கூட என் இன மக்களுக்கு இல்லை என்பதே வருத்தம்.ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை பாடத்தில் படித்துதான் தெரிய வேண்டிய காலம் வந்துவிடுமோ என்ற பயமும் நம்மை ஆட்கொள்ளதான் செய்கிறது. காலம் தான் பதில் சொல்லும். நாம் சொல்ல வைப்போம்.

Tuesday, November 4, 2008

ஊனம் மனதிலா? மனிதரிலா?

அரவாணிகள் நலவாரியம் உருவாகிவிட்ட போதிலும் இன்னும் அரவாணி சகோதரிகளின் நலன் பேனபடுகிறதா எனபது கேள்வி குறியாகவே உள்ளது. இச்சுழலில் என்னை வெகுவாய் பாதித்த விஷயம் "அரவாணி சகோதரிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்த்து சலுகை வழங்க வேண்டுமாம்". வியத்தகு கொடுமை. ஊனமில்லாது, சகமனிதரை போன்று வாழுகின்ற ஒருவரை எப்படி ஊனம் என்று சொல்ல முடியும்.
ஊனம் என்பது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம்.மேற்கண்ட எந்த குறைபாடும் இல்லாத ஒருவரை இப்படி ஊனம் என்று சொல்ல முடியும். சலுகைகள் வேண்டுமென்றால் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க சொல்லலாமே தவிர ஊனமுற்றவர் பட்டியலில் சேர்க்க சொல்ல்வது என்பது சமுதாய ஊனத்தையே சுட்டி காட்டுகிறது.
அரவாணி சகோதரிகளை பார்த்தாலே ஏதோ பாலியல் குறைபாடு உள்ளவர்களாகவே நாம் நினைக்கிறோம். நான்கு கால்களோடு பிறக்க வேண்டிய மிருகம் ஐந்து கால்களோடு பிறந்தால் அது அதிசயம், செய்தி ஊடகங்கள் அதை பெருமையாய் வெளிக்காட்டுகின்றன. ஆனால் ஒரு ஆணாக பிறந்த ஒருவர் மாற்று பாலின பெண்ணாக மாறுவதை ஏற்க மறுக்கிறது. என்ன கொடுமை.
டயோனசர் என்ற பார்க்காத மிருகத்தை பற்றி ஆரய்ந்து அதன் எலும்புகளை, முட்டைகளை பாதுகாக்கும் இந்த உலகம், கண்ணனுக்கு முன் இருக்கும் இந்த மக்களை பற்றி எண்ணாமல் இருப்பது விந்தையே. இந்திய தேசத்து நலனுக்காக ஒரு காந்தி இருந்தார். மிருகங்களின் நலுனுக்காக ஒரு மேனகா காந்தி, இப்படி மிருகங்களை விட மோசமாய் மதிக்கப்டும் இம்மக்களுக்கு எந்த காந்தி வருவார்.
"மனதில் ஊனம் இல்லாத யாரும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க முடியும்" இவங்க ஊனம் இல்லை, இவங்களை ஊனமாய் பார்க்கிற சமுதாயம் தான் ஊனம். ஆனால் அது நீங்க இல்லை.